ஷாகி எக்ஸ்போட்ஸ் பிரைவேட் லிமிட் .
2021
ஏப்ரல் 2020 இல், இந்தியாவின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி மையங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு நடைமுறைக்கு வந்தது. முன்னணி ஆடை பிராண்டுகளுக்காக உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உரிமையாளர்கள் பணம் செலுத்த மறுத்தனர். இதன் விளைவாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் 400,000 ஆடைத் தொழிலாளர்கள் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தில் ஏமாற்றப்பட்டனர்.
உலகளாவிய ஆடைத் தொழிலில் WRC ஆவணப்படுத்தியுள்ள மிக மோசமான ஊதிய திருட்டு இதுவாகும். ஆடை பிராண்டுகள் இந்த திருட்டை அறிந்திருந்தன, மேலும் இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தொடர அனுமதிக்கப்பட்டது. ஜனவரி 2022 க்குள், WRC கணக்கீடுகளின்படி, தொழிற்சாலைகள் கூட்டாக தொழிலாளர்களுக்கு $58 மில்லியனுக்கும் அதிகமாகக் கடன்பட்டிருந்தன.
2022 பிப்ரவரி தொடக்கத்தில் – ஆடை மற்றும் ஜவுளி தொழிலாளர் சங்கம் (GATWU) வெற்றிகரமாக வழக்கு தொடர்ந்த பின்னர், WRC நிறுவனங்களுடன் பல மாதங்கள் ஈடுபட்ட பிறகு, தொழிலாளர் உரிமை ஆதரவாளர்கள் பெருகிய முறையில் குரல் கொடுத்த பிறகு – இந்தியாவின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளரான ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ், கர்நாடகாவில் உள்ள தனது 80,000 ஊழியர்களுக்கு சரியான குறைந்தபட்ச ஊதியத்தை செலுத்தத் தொடங்குவதாக அறிவித்தது. தற்போதைய மற்றும் முன்னாள் தொழிலாளர்கள் இருவருக்கும் அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்தவும் நிறுவனம் உறுதியளித்தது. மற்ற சப்ளையர்களும் இதைப் பின்பற்றினர்.
2018
ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகம், லிமிடெட்டின் (ஷாஹி) யூனிட் 8 தொழிற்சாலை (பெங்களூரு, இந்தியா) தொழிலாளர்களின் அடிப்படை தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக மோசமான அடக்குமுறை மற்றும் பழிவாங்கும் பரப்புரை மேற்கொண்டது டபிள்யூஆர்சி-யின் விசாரணையில் தெரியவந்தது. கர்நாடக ஆடைத் தொழிலாளர்கள் சங்கத்துடன் (கேஒஒஜியு) இணைந்து தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காக மனு செய்ததற்குப் பழிவாங்கும் முயற்சியாக இது நடைபெற்றது. இந்த தொழிற்சாலையானது கொலம்பியா ஸ்போர்ட்ஸ்வேர் மற்றும் பெனட்டன், எச்&எம், மற்றும் அபெர்க்ரோம்பி & ஃபிட்ச் ஆகியவற்றிற்கான பல்கலைக்கழக இலட்சினை ஆடைகளை உருவாக்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆடை தயாரிப்பாளரான ஷாஹி, அஹுஜா குடும்பத்திற்கு சொந்தமானது. 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஆடைத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்யுமாறு கர்நாடகா மாநில அரசிடம் வலியுறுத்திய இந்த நிறுவனம் வெற்றியும் பெற்றது. ஏப்ரல் பிற்பகுதியிலும் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்த தொழிற்சாலையில் டபிள்யூஆர்சி நடத்திய விசாரணையில் 30-க்கும் மேற்பட்ட ஷாஹி தொழிலாளர்கள் நேர்காணல் வழங்கினர். ஷாஹி நிறுவனம், இந்திய சட்டம், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள், பல்கலைக்கழகம் மற்றும் வணிக பிராண்டு நடத்தை விதிகளை மீறுவதை டபிள்யூஆர்சி கண்டறிந்தது. இந்த மீறல்களில் உடல் ரீதியில் தாக்குதல், கொலை மிரட்டல்கள், பாலினம், சாதி மற்றும் மதம் சார்ந்த துஷ்பிரயோகம் மற்றும் வெகுஜன பணிநீக்க அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும்; மற்றும் 15 தொழிலாளர் ஆர்வலர்களை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றியது.
ஷாஹி, கொலம்பியா ஸ்போர்ட்ஸ்வேர் மற்றும் பிற பிராண்டுகளுடன் விசாரண முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை டபிள்யூஆர்சி பகிர்ந்து கொண்டது. மேலும், பணி நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் பணியில் அமர்த்துதல், வன்முறைச் செயல்களில் நேரடியாக ஈடுபட்ட மேலாளர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் தொழிற்சங்கத்தை உடனடியாக அங்கீகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தது. யூனிட் 8 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஷாஹி ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்க சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அது உடன்படவில்லை. ஷாஹி அவசியமான திருத்தம் செய்யத் தவறியதன் காரணமாக, தங்களின் விசாரணையை டபிள்யூஆர்சி பகிரங்கப்படுத்தியது, ஷாஹி மற்றும் பிராண்டுகள் மீது அழுத்தம் கொடுக்க கணிசமான ஊடக வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் கல்லூரி உரிமம் பெற்ற கொலம்பியாவிடம், தாங்களின் பரிந்துரைகளை வலியுறுத்த அழுத்தம் கொடுக்கவும் செய்தது.
டபிள்யூஆர்சி-யின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, ஷாஹி ஜூன் 25-ம்தேதி அன்று தொழிலாளர் சங்கத்தை சந்தித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஒயு) கையெழுத்திட்டது. அதன் முக்கிய அம்சங்கள் ஜூன் இறுதிக்குள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. 15 தொழிலாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை மிரட்டல்களுக்கு ஆளாகி, ஷாஹி யூனிட் 8 தொழிற்சாலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டும் இருந்தனர். அவர்கள் எந்தவித நிபந்தனைகளோ, துன்புறுத்தலோ இன்றி தொழிற்சாலையில் பணிக்குத் திரும்பியதோடு, அவர்களது ஊதியத்தையும் திரும்பப் பெற்றனர். தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் திரும்பவும் வந்ததை டபிள்யூஆர்சி-யின் பிரதிநிதிகள் மற்றும் வாங்குகின்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கண்காணித்தனர். தொழிற்சங்கத்தையும் அங்கீகரித்த ஷாஹி, வழக்கமான பேச்சுவார்த்தைகளுக்கும் ஒப்புக்கொண்டது. மேலும், வன்முறைக்கு காரணமான பெரும்பாலான மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை பணிநீக்கமும் செய்தது.
Read More:
- WRC Update: $9.4 Million in Back Wages Paid by Collegiate Supplier in India – July 8, 2022
- $28.6 Million in Back Pay Commitments for Indian Garment Workers – March 2, 2022
- Collegiate Supplier to Pay Back Wages to 80,000 Workers – February 2, 2022
- 80,000 Shahi Exports Workers Will Finally Get Their Back Pay – February 2, 2022
- Sweeping Minimum Wage Violations in Karnataka, India – October 14, 2021
- Columbia Supplier Says It Has Terminated Managers Who Directed Violence – July 5, 2018
- Workers Who Were Beaten Return to Columbia Supplier Factory in India, Now Violent Managers and Supervisors Must Go – June 28, 2018
- Update on Violence at Shahi Exports (Columbia Sportswear) – June 26, 2018
- WRC report on Shahi Exports PVT. LTD. – June 20, 2018
In the News:
- “US watchdog uncovers violence against pro-union workers at Indian factory,” The Guardian. – July 19, 2018
- “H&M, Columbia, and others are accused ofignoring disturbing abuses at a large Indian supplier,” Quartz. – June 25, 2018
- “Sonam Kapoor’s in-laws spend millions on wedding but get their own workers assaulted,” Catch News. – June 23, 2018
- “WRC Issues Report Alleging Abuse and Violence in Shahi Exports Factory in Bangalore,” WWD. – June 22, 2018
Join our newsletter
Sign up to the WRC’s mailing list to stay updated on our work.