டிரஸ் மாஸ்டர் அப்பேரல் பிரைவேட் லிமிடெட்

Key Buyers: Gap
Country: India
Last updated: 2021

டிரெஸ் மாஸ்டர் அப்பேரல் பிரைவேட் லிமிடெட்., இந்தியாவின் பெங்களூருவில் உள்ள கேப் விநியோகஸ்தர். 2020 ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. 1,200 தொழிலாளர்களுக்கு 346,134 டாலர் சட்டப்பூர்வ பணிநீக்க இழப்பீடு வழங்காமல் அது இருந்தது. டிரஸ் மாஸ்டர் இந்திய நிறுவனமான ரேமண்ட் லிமிடெட்டின் ஒரு பகுதியாக இருந்தது. மூன்று பிராண்டுகளுக்கு சொந்தமானது மற்றும் ஐந்து துணை நிறுவனங்களை இது இயக்குகிறது.

தொழிற்சாலைக்கு ஆர்டர்கள் குறைந்ததால், நிர்வாகம் தங்களை பணிவிலக ஊக்குவித்ததாக தொழிலாளர்கள் தெரிவித்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பே தொழிலாளர் குறைப்பு தொடங்கி இருந்தது. அரசு விதித்த கட்டாய பொது முடக்கம் காரணமாக, 2020 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொழிற்சாலை பெரும்பாலும் பல வாரங்களுக்கு மூடப்பட்டது, முகமூடிகளை தயாரிக்கும் பணியில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்தனர். மே 17-ம் தேதி தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டபோது, பாதி தொழிலாளர்களே திரும்ப அழைக்கப்பட்டனர். பின்னர், ஜூன் மாதத்தில், ஆர்டர்கள் இல்லாததால் தொழிற்சாலை மீண்டும் தற்காலிகமாக மூடப்படும் என்றும், தொழிற்சாலை மறுபடியும் திறக்கப்படும்போது அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகும், டிரஸ் மாஸ்டர் மூடியே உள்ளது. மேலும் அது தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய சில சலுகைகளை (வருடாந்திர போனஸ் மற்றும் சம்பாதித்த விடுப்பு ஊதியம்) வழங்கியிருந்தாலும், பணிநீக்க இழப்பீடுகளை வழங்கவில்லை.

டிரஸ் மாஸ்டர் நிறுவனம் தொழிலாளர்களுக்கு எல்லா இழப்பீடுகளையும் செலுத்திவிட்டதாக கேப் தெரிவிக்கிறது. இருப்பினும், பணிநீக்க இழப்பீட்டில் ஒரு ரூபாய் கூட தாங்கள் பெறவில்லை என்று தொழிலாளர் பிரதிநிதிகள் தொடர்ந்து தகவல் அளித்து வந்தனர். டிரஸ் மாஸ்டர் நிறுவன உரிமையாளர்களால் கேப்-க்கு தவறான தகவல் அளிக்கப்பட்டதாக டபிள்யூஆர்சி முடிவுக்கு வந்துள்ளது.

Read More:

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.

Related posts