அவெரி டென்னிசன்
பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஆடை மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஜிஎடிடபிள்யூயு) பிரதிநிதித்துவத்தை கோரிய நிறுவன ஊழியர்களுக்கு எதிராக அவெரி டென்னிசன் மேற்கொண்ட நடவடிக்கையை டபிள்யூஆர்சி விசாரித்தது. அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்த ஆலையில் தொழிலாளர்களின் சங்க உரிமைகளை அவெரி டென்னிசன் மீறியதை டபிள்யூஆர்சி கண்டறிந்தது:
- தொழிற்சாலை மனித வள மேலாளரால் தொழிற்சாலையில் பதவியில் உள்ள தொழிற்சங்கத்தின் தலைவருக்கு முறையற்ற முறையில் பணம் வழங்குதல் மற்றும் ஜிஎடிடபிள்யூயு-வின் பிரதிநிதித்துவம் கோரும் தொழிலாளர்களின் முயற்சியை எதிர்க்கும் வகையில் அந்த தொழிற்சங்கத்தின் தலைவர்களை ஒன்றுசேர்ப்பது;
- ஜிஎடிடபிள்யூயு-யை ஆதரிக்கும் ஊழியர்களுக்கு எதிராக வன்முறை, குற்றவியல் வழக்கு, மற்றும் வீட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற அச்சுறுத்தல்களை உடல்ரீதியாக தாக்குவதற்கும் மற்றும் வெளியிடுவதற்கும் தற்போதைய தொழிற்சங்கத்தின் ஆதரவாளர்களை அனுமதித்தல்; மற்றும்
- தொழிலாளர்களின் வன்முறையற்ற சங்கச் செயல்பாடுகளின் மீது மிரட்டல் விடுக்கும் கண்காணிப்பை நடத்துதல்.
இந்த விசாரண முடிவுகளை அவெரி டென்னிசன், கொலம்பியா (கல்லூரி சார் உரிமம் பெற்றது) மற்றும் இந்த தொழிற்சாலையில் இருந்து சேவை பெறுகின்ற பிற பிராண்டுகளோடு டபிள்யூஆர்சி பகிர்ந்து கொண்டது. அதன் விளைவாக, டபிள்யூஆர்சி-யை தொடர்பு கொண்ட அவெரி டென்னிசன் திருத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டது. அவெரி டென்னிசன், ஜிஎடிடபிள்யூயு மற்றும் தற்போதைய தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குழுவை அங்கீகரித்து, பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் மற்றும் பயன்களில் குறிப்பிடத்தக்க மேம்படுடன் ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
Read more:
- WRC Factory Assessment re: Avery Dennison – March 11, 2020
Join our newsletter
Sign up to the WRC’s mailing list to stay updated on our work.